1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 28 மார்ச் 2023 (07:02 IST)

கொரோனாவுக்கு பிறகு அதிகரிக்கும் ஞாபக மறதி நோய்: அப்போலோ மருத்துவர்கள் தகவல்

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு பிறகு ஞாபக மறதி நோய் உள்ளிட்ட ஒரு சில நோய் அதிகரித்துள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா உட்பட பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியது என்பதும் இதன் காரணமாக லட்சக்கணக்கான உயிர் பலியானது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையின் சார்பில் நெஞ்சக சிகிச்சைக்கான உச்சி மாநாடு சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மருத்துவ நிபுணர்களில் ஒருவரான நரசிம்மன் அவர்கள் பேசிய போது ’கொரோனாவின் தாக்கம் நமக்கு பலவற்றை கற்றுக் கொடுத்து விடுகிறது என்றும் எதிர்காலத்தில் மருத்துவத் துறையின் பயன்பாட்டை தெளிவுபடுத்தி உள்ளவர்கள் என்று தெரிவித்தார் 
 
மேலும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு ஞாபக மறதி, சுறுசுறுப்பு இல்லாமை, நுரையீரல் கோளாறு, உடல் சோர்வு, சர்க்கரை நோய் ஆகியவை அதிகரித்து உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அதேபோல் இன்புளூன்ஸ்டா காய்ச்சலுக்கு பிறகு மாரடைப்புகள் அதிகரித்து உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
கொரோனாவால் பாதிக்கப்படும்போது உடலின் மற்ற உறுப்புகள் பாதிப்படைய வாய்ப்பிருப்பதாக ஏற்கனவே மருத்துவர்கள் கூறிய நிலையில் தற்போது அப்போலோ மருத்துவமனை மருத்துவரின் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran