ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2022 (13:34 IST)

பாஜக vs திமுக: போலீஸ்காரங்களே குறுக்க வராதீங்க… அண்ணாமலை!

பாஜக தொண்டர்கள் மீது கை வைத்த யாரையும் விடமாட்டேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி, தமிழகத்தில் பாஜக தொண்டர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்தப்பட்டுள்ளது. மதுரையில் நடந்த சம்பவம் எல்லோருக்கும் தெரியும். பிரச்சினைகள் குறித்து டிஜிபி யிடம் பேசியுள்ளோம். பாஜக சார்பில் நான்கு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தொண்டர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

பாஜக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கிறோம். காவல்துறை ஆரம்பத்தில் சுனக்கமாக இருந்தாலும் கூட, தற்போது சுதாரித்துக் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும்.

15 மாத காலமாக தமிழக உளவுத்துறை சரிவர செயல்படவில்லை. கோவை காவல்துறை அதிகாரிகள் மீது நான் புகார் கொடுக்க உள்ளேன். பாஜக தொண்டர்கள் மீது கை வைத்த யாரையும் விடமாட்டேன். இன்னும் இரண்டு ஆண்டில் திமுக ஆட்சியில் இருக்காது. சட்டம் ஒழுங்கு சீர் குலைய கோவை மாநகர காவல்துறையே காரணம்.

காவல்துறை நடுனிலையோடு நடந்து கொள்ள வேண்டும். தடையை மீறி பாஜக சார்பில் கண்டன போராட்டம் நடைபெறும். கருத்து சொன்னால் வன்கொடுமை தடுப்பு சட்டம் போடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறை ஏவல்துறையாகவே உள்ளது.

பொதுமக்களை மிரட்டிய திமுக எம் எல் ஏ மீது முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எதையும் பார்த்துக்கொண்டு மத்திய அரசு வேடிக்கை பார்க்காது. பாஜகவிற்கும் திமுக விற்கும் நடைபெறும் போரில் காவல்துறை உள்ளே வரக்கூடாது. வன்முறையை பாஜக விரும்பவில்லை. பாஜக தொண்டர்களை கட்டுப்படுத்தி வைத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.