1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 19 மார்ச் 2021 (15:34 IST)

சசிகலாவை சந்தித்து ஆசி வாங்கிய இரு அமமுக வேட்பாளர்கள்!

அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள சசிகலா இரண்டு அமமுக வேட்பாளர்களுக்கு ஆசி வழங்கியுள்ளார்.

மார்ச் 3 ஆம் தேதி இரவு அமமுகவின் பொதுச்செயலாளரும் ஜெயலலிதாவின் உற்ற தோழியுமான சசிகலா அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவரை நம்பியுள்ள அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அமமுக தேமுதிக உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது.

இந்நிலையில் இப்போது தஞ்சையில் குடும்ப நிகழ்வுக்காக சென்றுள்ள சசிகலாவை கும்பகோணம் அமமுக வேட்பாளர் பாலமுருகன் மற்றும் ஒரத்தநாடு அமமுக வேட்பாளர் மா.சேகர் ஆகியோர் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர். சசிகலா அவர்களிடம் மகிழ்ச்சியாக பேசி வாழ்த்துகளை தெரிவித்தாராம்.