1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 3 மார்ச் 2022 (13:05 IST)

தன்னைத் தானே சுட்டு பாதுகாப்பு வீரர் தற்கொலை! – சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தவர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் யஸ்பால். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் சமீப காலமாக சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார்.

இன்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் பணியில் இருந்த அவர் கழிவறைக்குள் சென்று தான் வைத்திருந்து துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடிசென்ற பார்த்த தூய்மை பணியாளர் இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். இந்த தற்கொலை சம்பவம் விமான நிலையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.