1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. After Perarivalan release cm stalin discuss about 6 releases

பேரறிவாளன் விடுதலையை அடுத்து 6 பேர் விடுதலை: சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் ஆலோசனை!

stalin
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன் சமீபத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக விடுதலை செய்யப்பட்டார் 
 
இதனை அடுத்து மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது
 
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் சிறையில் இருந்த நிலையில் அவர்களில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். இதனை அடுத்து மற்ற ஆறு பேரின் விடுதலைக்கும் முயற்சி செய்யப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே கூறிய நிலையில் இது குறித்து சட்ட வல்லுனர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கலால் வரி குறைப்பு: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50 , டீசல் ரூ.7 குறையும்- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்