வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 20 அக்டோபர் 2019 (08:45 IST)

எடப்பாடி அரசு கவிழ்ந்த அடுத்த நாள் அரசியல் கட்சி: ரஜினி குறித்து தமிழருவி மணியன்

அதிமுக ஆட்சி கவிழ்ந்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வர் நாற்காலியில் இருந்து இறங்கிய அடுத்த நாள் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என தமிழருவி மணியன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:
 
ரஜினிகாந்த் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்து கொண்டிருப்பதால் அவர் அரசியலுக்கு வருவாரா? என்று கேட்கின்றீர்கள். இந்த கேள்வியை எம்ஜிஆரிடம் ஏன் யாரும் கேட்கவில்லை. அவர் கட்சி ஆரம்பித்தவுடனும், தேர்தல் நேரத்திலும் தேர்தலில் வெற்றி பெற்றவுடனும், படங்கள் நடித்து கொண்டிருந்தார். ஏன், முதல்வர் பதவியை ஏற்க சில நாட்களுக்கு முன் கூட அவர் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தில் நடித்தார்.
 
அதேபோல் ரஜினிகாந்த் தற்போது ‘தர்பார்’ படத்தில் நடித்துள்ளார். அந்த படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. அதனையடுத்து அவர் இன்னொரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த பட்ம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வரவுள்ளது. எனவே தீபாவளி முடிந்தவுடன் ரஜினிகாந்த் முழுநேர அரசியலில் இறங்குவார்’ என தமிழருவி மணியன் தெரிவித்தார்.
 
ரஜினிகாந்த் வரும் ஏப்ரலில் கட்சி ஆரம்பிப்பார் என்று கூறப்படும் நிலையில் தீபாவளிக்கு பின்னர்தான் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என தமிழருவி மணியன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது