தொடர்புடைய செய்திகள்
- புயலை விரட்டிய ஆன்மீக அரசியல்; ரஜினியுடன் கூட்டணியா? – சூசகம் சொல்லும் ராஜேந்திர பாலாஜி!
- தமி்ழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: பலி எண்ணிக்கை 16
- நான் ஷூட்டிங்காக போறேன்.. யாரும் பிறந்தநாளுக்கு வீட்டுக்கு வராதீங்க! – ரஜினி அறிவிப்பு
- டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு மய்யம் ஆதரவு! – புறப்பட்டது 10 பேர் கொண்ட குழு!
- காங்கிரசுடன் சேர்ந்து மிகப்பெரிய தவறு செய்து விட்டேன்: முன்னாள் முதல்வர் பரபரப்பு பேச்சு
ஜெயலலிதா பத்தி என்ன பேசணும்? நான் ரெடி.. வாங்க! – ஆ.ராசாவுக்கு ஜோதி சவால்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி திமுகவின் ஆ.ராசா பல இடங்களில் அவதூறாக பேசி வருவதால் அவருடன் விவாதிக்க தயார் என வழக்கறிஞர் ஜோதி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக – திமுக இடையேயான வாக்குவாதங்களும் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சமீபகாலமாக முன்னாள் அதிமுக பொதுசெயலாளரான ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு குறித்து பல இடங்களில் பேசி வரும் ஆ.ராசா நீதிமன்ற தீர்ப்பில் அவரை குற்றவாளி என்று குறிப்பிட்டுள்ளதாகவும் பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதா வழக்கு குறித்து ஆ.ராசாவுடன் நான் விவாதிக்க தயார் என சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ஜோதி தெரிவித்துள்ளார். மேலும் “ஜெயலலிதா அரசியலமைப்பு சட்டத்தை மீறியவர் என்றும், கொள்ளைக்காரி என்றும் நீதிமன்ற தீர்ப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழை தாக்கல் செய்திருந்தால் வழக்கில் இருந்து அவரது பெயர் விடுவிக்கப்பட்டிருக்கும்” என்றும் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
