வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 4 மார்ச் 2021 (10:28 IST)

அதிமுக வேட்பாளர் தேர்வு நேர்காணல் தொடங்கியது!

அதிமுகவின் தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு சற்று முன்னர் தலைமை அலுவலகத்தில் தொடங்கியுள்ளது.

சட்டப் பேரவைத் தோதலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்ப மனு தாக்கல் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. விருப்பமனுக்களுக்குக் கடைசி நாள் மார்ச் 3 என்று அறிவிக்கப்பட்டது. நேற்றோடு அது முடிந்ததால் இப்போது வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் தொடங்கியுள்ளது. அதன்படி, சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் தொடங்கியுள்ளது.