1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 21 மார்ச் 2022 (20:02 IST)

ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் அருண்விஜய் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அருண் விஜய் இரண்டு ஆண்டுகளாகக் கொரொனா தொற்றுக் காரணமாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்க இயலாத நிலையில்,       அவர்களுடன் தொலைபேசி மற்றும் வீடியோ கால் மூலமாக பேசிவந்தார்.

தற்போது கொரொனா தொற்றுப் பாதிப்பில் இருந்து மீண்டு, மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர். இ ந் நிலையில்,  அருண் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்துப் பேசிவருகிறார்.

சமீபத்தில், கோவை,திருப்பூர், தஞ்சாவூர் மாவட்ட ரசிகர்களைச் சந்தித்த அவர் தற்போது சென்னை மாவட்ட  ரசிகர்களை சந்தித்துப்பேசியுள்ளார். மேலும் தன்னை சந்திக்க வந்த ரசிகர் ஒருவரின் பிறந்த நாளை அறிந்து வைத்திருந்த அருண்விஜய் அவருக்கு  கேக்வெட்டி தன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதனால்  ரசிகர்  இன்பதி அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அருண் விஜய் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள யானை படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.