இரண்டு நிமிடம் போதும்.. ஆதார் எண்ணை இணைக்க! – மின்சாரவாரியம் செய்த மாற்றம்!

திங்கள், 5 டிசம்பர் 2022 (09:31 IST)
மின் கணக்கீட்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இணையத்தில் இணைக்கும் முறையை மின்சார வாரியம் மேலும் எளிமைப்படுத்தியுள்ளது.

மின்கணக்கீட்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் அறிவித்தார். அதை தொடர்ந்து மின் கணக்கீட்டு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்காக அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமான மின் கணக்குகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆன்லைனில் மின் கணக்கீட்டு எண்ணுடன் ஆதாரை இணைக்கும்போது ஆதார் நகலை அப்லோடு செய்வது அவசியமாக இருந்தது. இதனால் ஆதார் இணைக்கும் பணி தாமதம் ஆவதுடன், இணைய வேகம் பத்தாமல் பைலை அப்லோடு செய்வதில் பிரச்சினைகள் எழுவதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில் தற்போது ஆதார் நகல் அப்லோடு செய்ய தேவையில்லை என மின்வாரியம் அறிவித்துள்ளது. அதற்கான வசதி இணையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

மின்கணக்கீட்டு எண், உரிமையாளர் விவரங்களை பூர்த்தி செய்து இறுதியாக ஆதார் எண்ணை பதிவேற்றினால் ஆதாரில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும் அதை ரெஜிஸ்டர் செய்தாலே இணைக்கும் பணி முடிந்துவிடும் என எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

எல்லாம் காட்டு

நாங்க ஆட்சியை கவுக்க மாட்டோம்!.. பயப்பட வேண்டாம்!.. தவெகவுக்கு திருமா அட்வைஸ்!..

நாங்கெல்லாம் விஜய்க்குதான் ஓட்டு போட்டோம்!.. ஆனா!.. டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல்!...

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்.எல்.ஏக்கள்!.. தவெக போடும் கணக்கு!...

6 மாசம் கம்முன்னு இருப்போம்னு சொல்லிட்டு இப்ப ஏன் கத்துறீங்க!.. செங்கோட்டையன் பேட்டி!..

தமிழகம் போலவே மேற்குவங்கத்திலும்... பள்ளி, கல்லூரி, கோவில்களுக்கு அருகே மதுக்கடைகள் தடை.. முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments