வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 16 நவம்பர் 2022 (21:43 IST)

தன் காதலியின் 'காதலர்' மீது தீ கொளுத்திய வாலிபர்!

சென்னையில் தான் காதலித்த பெண் வேறு ஒருவருடம் பழகியதால் அவர் மீது பெட்ரோல் ஊற்றிக் கொல்ல முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாசர் பாடி என்ற பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். இவர் புளியந்தோப்பில் உள்ள ஆட்டுத்தொட்டியில், ஆடுகளைப் பராமரிக்கும் வேலை செய்து வந்துள்ளார்.  இவர் இன்று தன் வேலையை முடித்துவிட்டு, அங்குள்ள ஒரு மினி வேனில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது,அங்கு வந்த ஒரு நபர், அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீயைப் பற்றவைத்துள்ளனர். அருகில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரித்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பசீர் என்பவர் ஒரு பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், அப்பெண், ராஜேஷை காதலித்து வந்துள்ளார், இந்த ஆத்திரத்தில்,இவ்வாறுசெய்ததாகப் போலீஸ் விசாரணையில் பசீர்  தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj