1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 7 ஜூலை 2022 (17:29 IST)

இந்தியாவில் புதிய வகை கொரோனா... சுகாதாரத்துறை திட்டவட்டம்!

corono
கடந்த 2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரொனா பரவியது. இதன் 3 அலைகள் முடித்த நிலையில், 4 வது அலைகள் உருவாகியுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில்,  கொரொனா தொற்றுச் சமீப காலமாக அதிகரித்து வரும் ந்லையில்,கடந்த 2 வாரங்களாக உலக அளவில் கொரொனா பாதிப்புகள் அதிகரித்துள்ளது. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், பிஏ.4 மற்ற்ம் பியே.5 அலைகள் உருவாகியுள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஏபி.2.75 என்ற புதிய வகை வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு புதிய வைரஸ் தோன்றினால், அது முந்தைய வைரஸை விட வித்தியாசமாக இருக்குமனால் அது தனி மாறுபாடு என அழைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்தப் புதிய வகை வைரஸ் தொற்று இந்தியாவில் உருவாகியுள்ளதை சுகாதார அமைப்புத்திட்டமாக உறுதி செய்துள்ளது.