1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 1 ஜூலை 2023 (14:21 IST)

மனைவியின் தலையை துண்டித்து கொன்ற பூ வியாபாரி

திருப்பூர் மாவட்டத்தில் மனைவியின் தலையை துண்டித்து கொன்ற பூ வியாபாரியை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் கொங்கு மெயின்ரோடு டி.எம்..எஸ். நகர் 4 வது வீதியில் வசிப்பவர் மணிகண்டன்(36). இவரது மனைவி பவித்ரா(23). இவர்களுக்கு 1 ½ வயதில் ஒரு மகன் இருக்கிறார். பவித்ரா மணிகண்டனுக்கு 2 வது மனைவி ஆவார்.

இதேபோல் பவித்ராவுக்கும் ஏற்கனவே திருமணமாகி 2 வதாக திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில், இவர்கள் குடும்பத்தில் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இதில், பவித்ரா  நேற்று அவரது தாயாருடன்  வாக்குவாதம் செய்துள்ளார். இதில் இருவருக்கும்  கைகலப்பில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் அரிவாளால் பவித்ராவின் தலையை வெட்டிக் கொலை செய்ததாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து திருப்பூர் வடக்கு  போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.