1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 30 மார்ச் 2021 (20:13 IST)

கொரோனா பரவல் அதிகரிப்பு: டாஸ்மாக், திரையரங்குகள் மூடப்படுமா?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இன்றும் 2300க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கோரனோ வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக டாஸ்மார்க் திரையரங்கு உள்ளிட்டவற்றை மூட வேண்டுமென வழக்கு தொடரப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் வழிபாட்டுத்தலங்கள் ஆகியவற்றை மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்ந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம் குமார் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்
 
இந்த மனுவில் கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பின்னர் பல மடங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் இந்தியாவில் பல நகரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் டாஸ்மார்க் கடைகள் மூடுதல் உள்பட சில கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார், இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது