1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 23 அக்டோபர் 2023 (10:32 IST)

பாஜகவில் இருந்து விலகிய சில நிமிடங்களில் அதிரடி.. நடிகை கவுதமி புகாரில் வழக்குப்பதிவு..!

நடிகை கௌதமியின் சொத்து அபகரிக்கப்பட்டதாக அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இன்று காலை நடிகை கவுதமி, பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த அடுத்த சிலமணி நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடிகை கவுதமியின் புகாரின் அடிப்படையில் அழகப்பன், அவரது மனைவி உட்பட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்ததாக கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த செப்டம்பரில் புகார் அளித்தார்.

அதேபோல் கோட்டையூரில் ரூ.7.70 கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரித்ததாகவும்  கௌதமி புகார் அளித்திருந்தார். கௌதமி அளித்த இரு புகார்களிலும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Edited by Siva