1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 21 பிப்ரவரி 2024 (08:16 IST)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: 17 போலீசார் மீது கொலை வழக்கு பதிய கோரிக்கை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 17 போலீசார் மீது கொலை வழக்கு பதிய கோரிய மனு  மீது இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்த அருணா ஜெகதீசன் அறிக்கையின்படி 17 போலீஸார் மீது கொலை வழக்கு பதிய கோரிக்கை விடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான 13 பேரில் 17 வயது ஸ்னோலினின் தாய் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். ஸ்னோலின் தாய் போலீசார், வருவாய் துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறவுள்ளது.

முன்னதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய போது போலீஸார் துப்பாக்கிச்  சூட்டில் 13 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva