1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (11:39 IST)

8 நாட்களுக்கு 144 தடை உத்தரவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!

தென்காசி மாவட்டத்தில் 8 நாட்களுக்கு 144 தடை உத்தரவு என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
தென்காசி மாவட்டத்தில் புலித்தேவரின் 388 பிறந்தநாள் மற்றும் ஒண்டிவீரன் 252 வது வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 
 
இந்த நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு உள்ளனர் இதனை அடுத்து தென்காசி மாவட்டத்தில் 8 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
ஒண்டிவீரன் நிகழ்ச்சிக்காக இன்று முதல் 21 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அதேபோல் புலித்தேவர் பிறந்த நாள் நிகழ்ச்சிக்காக ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 2 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக  தென்காசி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது
 
Edited by Mahendran