தொடர்புடைய செய்திகள்
- ரெம்டெசிவிர் எங்கே கிடைக்கிறது? என்ன பயன்? தமிழ்நாட்டுக்கு பாகுபாடா?
- ரெம்டெசிவிரை ப்ளாக்ல வித்தா கடும் நடவடிக்கை! – ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!
- அரசு பேருந்தில் 100 ரெம்டெசிவிர் மருந்து கடத்தல்: பெண் மருத்துவர் உடந்தையா?
- ரெம்டெசிவிரை கள்ள சந்தையில் விற்ற டாக்டர் – தாம்பரத்தில் கைது!
- சென்னை ஐகோர்ட்டுக்கு ஒரு மாதம் விடுமுறை என அறிவிப்பு!
மதுரை மருத்துவமனையில் காணாமல் போன 8 பெட்டிகள் ரெம்டெசிவிர்: அதிர்ச்சி தகவல்!
கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்கள் ரெம்டெசிவிர் மருந்துகளை செலுத்த வேண்டும் என்ற செய்தி வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ரெம்டெசிவிர் மருந்துக்கு மிகப்பெரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் கள்ள மார்க்கெட்டில் ரெம்டெசிவிர் மருந்தை பொருட்களை விற்பனை செய்யும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் மருந்து இருப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த மருந்துகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ள சம்பவம் தெரியவந்துள்ளது
மதுரை சேமிப்பு கிடங்கு ஊழியர்களிடம் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்
அதிக லாபத்திற்கு கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்காக அரசு மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 8 ரெம்டெசிவிர் பெட்டிகள் கொள்ளை போயுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் இருந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
அடுத்த கட்டுரையில்
