1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (14:15 IST)

60 நாய்கள் இரும்பு ராடுகளால் கொன்று புதைப்பா? கும்பகோணத்தில் பரபரப்பு..!

dogs
கும்பகோணத்தில் மாநகராட்சி ஊழியர்கள் 60 தெருநாய்களை கொன்று ஆற்றங்கரையில் புதைத்ததாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
கும்பகோணம் பட்டீஸ்வரம் என்ற பகுதியில் ஏராளமான தெருநாய்கள் இருப்பதாகவும் அந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோர்களை நாய்கள் கடித்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. 
 
தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு பல புகார்கள் குவிந்தத்தை அடுத்து கடந்த ஒன்பதாம் தேதி இரவு நாய் பிடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் 60 நாய்கள் பிடிக்கப்பட்டதாகவும் அந்த நாய்கள் இரும்பு ராடுகளால் அடித்துக்கொண்டு ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் மத்தியில் ஒரு செய்தி பரவி வருகிறது. 
 
ஆனால் இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் கூறிய போது என் மீது உள்ள காலழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் நாய்களைக் கொன்று புதைத்ததாக புகார் அளித்துள்ளனர். பிடிக்கப்பட்ட நாய்களை கொள்ளிடம் வரையில் பாதுகாப்பாக விட்டு விட்டோம், நாய்களை கொல்லவும் இல்லை புதைக்கவும் இல்லை என்று தெரிவித்தார்.
 
Edited by Siva