1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (10:54 IST)

இன்று ஒரே நாளில் 37 தமிழக மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படை அட்டூழியம்..!

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது கடந்த பல ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கமாக இருந்து வரும் நிலையில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. 
 
எந்த ஆட்சி வந்தாலும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது மட்டும் தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில்  இன்று ஒரே நாளில் 37 தமிழகம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை அனுப்பி உள்ளது. 
 
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஐந்து விசைப்படகுகள் மற்றும் அதிலிருந்து 37 மீனவர்களையும் ஐந்து விசைப்படகுகளை கைப்பற்றிய இலங்கை கடற்படை அதிலிருந்து 37 மீனவர்களையும் கைது செய்துள்ளது 
 
ந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை மீனவர்கள் சங்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.
 
Edited by Siva