1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 27 அக்டோபர் 2023 (18:49 IST)

12 தமிழக மீனவர்களை கைது செய்த மாலத்தீவு கடற்படை.. இலங்கையை அடுத்து இன்னொரு நாடா?

தமிழக மீனவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படையினர் கைது செய்து வரும் நிலையில் தற்போது மாலத்தீவு கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வரும் நிலையில் தற்போது தூத்துக்குடியைச் சேர்ந்த 12 தமிழக மீனவர்களை மாலத்தீவு கடற்படை கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தூத்துக்குடி மாவட்டம்  தருவைகுளம் என்ற பகுதியை சேர்ந்த 12 மீனவர்களை மாலத்தீவு கடலோர கடற்படை காவல்படை கைது செய்துள்ளதாகவும் அவர்களிடம் விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

 இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய   மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி மீனவர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Edited by Siva