1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (08:50 IST)

விருப்ப பாடத்தில் 35 மதிப்பெண்கள் கட்டாயம்: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்..!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் அல்லது ஆங்கிலத்தை தாய்மொழியாக கொள்ளாத மாணவர்கள் விருப்ப பாடம் எடுத்தால் அதில் 35 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்றும் அடுத்த கல்வி ஆண்டு முதல் இந்த முறை அமலுக்கு வருகிறது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் சிலர் தமிழை தாய்மொழியாக இல்லாத நிலையில் வேறு மொழியை விருப்ப பாடமாக எடுத்து பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் அல்லாத மொழியை விருப்ப பாடமாக எடுத்து பயின்று வருபவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 35 மார்க் கண்டிப்பாக எடுத்து தேர்ச்சி பெற வேண்டும் என்று தமிழ் கற்றல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் இனி உருது, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட விருப்ப பாடங்களை எடுத்துள்ள மாணவர்கள் கண்டிப்பாக 35 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற வேண்டும் என்றும் அந்த மதிப்பெண்களும் மதிப்பெண் சான்றிதழில் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை அடுத்து இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Edited by Siva