தொடர்புடைய செய்திகள்
- கள்ளச்சாராய வழக்கு..! தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கைது..!!
- மெத்தனால் வாங்க ஜிஎஸ்டி எண்ணை கொடுத்த ஹோட்டல் உரிமையாளர்.. விசாரணையில் திடுக் தகவல்..!
- தமிழக மீனவர்கள் 18 பேர் கைது..! தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்..!!
- தந்தை ரேவண்ணா, மகன் பிரஜ்வல் ரேவண்ணாவை அடுத்து இன்னொரு மகன் சூரஜ் ரேவண்ணா கைது!
- கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: ஹோட்டல் உரிமையாளர், மீன் வியாபாரி கைது..!
சென்னை அருகே மெத்தனால் கலந்த 1500 லிட்டர் ரசாயனம் பறிமுதல் - 4 பேர் கைது
சென்னையை அடுத்த செங்குன்றம், வடபெரும்பாக்கம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் மெத்தனால் கலந்த 1500 லிட்டர் ரசாயனம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையை அடுத்த செங்குன்றம், வடபெரும்பாக்கம் பகுதியில் தனியார் கெமிகல் குடோனில் சோதனை நடத்தியபோது மெத்தனால் கலவையுடன் இருந்த 1500 லிட்டர் ரசாயனம் சிக்கியது. இதனையடுத்து கொருக்குப்பேட்டை கவுதம், மலையனுர் பரமசிவம், மாதவரம் பென்சிலால், ராம்குமார் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் இந்த நான்கு பேர்களுக்கும் கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் சிக்கிய மாதேஷ்க்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை வருகிறது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
