1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 4 செப்டம்பர் 2023 (14:06 IST)

14 பேர் சொந்தச் செலவில் ஏழுமலையான் தரிசனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்-தேவஸ்தான உறுப்பினர்

தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்களில் வாரத்தில் ஒருமுறை 14 பேர் சொந்தச் செலவில் ஏழுமலையான் தரிசனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் டாக்டர் சங்கர் தெரிவித்துள்ளார்.

ஆந்திரம் மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ளது உலகப் பிரசித்து பெற்ற ஏழுமலையான் கோவில். இந்தக் கோயிலுக்கு  இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஏழுமலையான் தரிசனத்திற்கு, சொந்தச் செலாவில் 14 பேர் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் டாக்டர் சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்களில் வாரத்தில் ஒருமுறை 14 பேர் சொந்தச் செலவில் ஏழுமலையான் தரிசனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.