1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 23 மார்ச் 2023 (08:37 IST)

12 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை.. முடிவே இல்லையா என மீனவர்கள் அதிருப்தி..!

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று மீண்டும் 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தொடர் நிகழ்வை தடுக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்த நிலையில் இது குறித்து மத்திய மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. 
 
இந்த நிலையில் இன்று மீண்டும் 12 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 
 
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் என்ற பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படை கைது செய்ததாக கூறப்படுகிறது.
 
Edited by Siva