1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 22 அக்டோபர் 2021 (13:02 IST)

இந்த 11 மாவட்ட மக்களே உஷார்.. கனமழைக்கு எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு என தகவல். 

 
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாக பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் 26 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, தருமபுரி, திருச்சி, மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.