1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 9 மே 2020 (09:59 IST)

ஜூன் டூ ஜூலையா... மீண்டும் தள்ளிப்போகும் 10 ஆம் வகுப்பு தேர்வு?

ஒரு மாதத்திற்கு மேலாக தள்ளி போய் இருக்கும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.  
 
இந்தியா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்தப்படாத சூழலில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மே 3 ஆம் தேதிக்குப் பின் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு எப்போது நடக்கும் என்ற கேள்வி எழுந்தது.  
 
இதற்கு தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் நடத்தப்படலாம் என சொல்லப்பட்டது. இதனை உறுதி செய்யும் விதமாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை ஜூன் மாதம் வெளியிடப்படும் என தகவ்ல் வெளியானது. 
 
ஆனால், நேற்று கொரொனா வைரஸ் காரனமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ஜூலை 1 முதல் 15 வரை நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. 
 
இதனைத்தொடர்ந்து 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும். உயர்மட்டக்கூழு கூட்டத்திற்கு பின்னர் ஜூன் மாதம் இறுதிக்கு பிறகு தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் தேர்வுகள் ஜூலை மாதம் நடத்தப்பட கூடும் என தெரிகிறது.