தொடர்புடைய செய்திகள்
- உடல் பருமன் பிரச்சினைக்கு நல்ல நிவாரணம் தரும் கருஞ்சீரக டீ !!
- சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்கும் எளிமையாக அழகு குறிப்புகள் !!
- தலைமுடி உதிர்வு பிரச்சனைகளுக்கு இயற்கை முறையில் தீர்வு !!
- உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவும் வெண்டைக்காய் !!
- நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கு கெடுதலை ஏற்படுத்துமா...?
இருமலை குணப்படுத்த சில பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் !!
மாறிவரும் வானிலை, குளிர், சூடான உணவு அல்லது குடிப்பழக்கம் அல்லது தூசி அல்லது வேறு எதற்கும் ஒவ்வாமை காரணமாகவும் இருமல் ஏற்படலாம்.
இருமல் பிரச்சனை இருக்கும்போது, நீங்கள் எந்த வேலையும் ஆறுதலுடன் செய்ய முடியாது. இருமலில் இருந்து விடுபட சில வீட்டு வைத்தியங்களை நாம் சில வீட்டு வைத்தியங்களை பார்ப்போம்.
ஒரு கிராம் கல்லு உப்பு மற்றும் 125 கிராம் தண்ணீரை கலந்து, அதை பாதியாக குறைக்கும் வரை கொதிக்க வைக்கவும். பின்னர் இந்த கொதித்த நீரினை காலையிலும் மாலையிலும் குடிப்பதால் இருமலில் இருந்து நிம்மதி கிடைக்கும்.
கல்லு உப்பினை ஒரு நகம் அளவிற்கு எடுத்து நெருப்பில் நன்கு சூடாக்கவும், உப்பு அடுக்கு சூடேறி சிவப்பு நிறமாக மாறும் வரை காத்திருக்கவும். பின்னர் ஒரு கோப்பை தண்ணீரில் அதனை இடவும். இந்த தண்ணீரை இரவில் தூங்குவதற்கு முன் பருகவும். இதன் மூலம் இருமலில் இருந்து நிம்மதி பெறலாம்.
வறட்டு இருமலுக்கு நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் புதினா ஒரு அருமருந்தாகும். புதினாவை துவையலாகவோ அல்லது சூப் செய்தோ சாப்பிடுவதால் வறட்டு இருமலில் இருந்து எளிதில் விடுபடலாம்.
ஒரு பாத்திரத்தில் 15-20 கிராம் நெய் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை எடுத்து, குறைந்த தீயில் சூடாக்கி குளிரவிட்டு சுமார் 20 கிராம் சர்க்கரையுடன் சேர்த்து மிட்டாய் கலவை போன்று உருவாக்கவும். வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த பண்டத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை, தொடர்ந்து இரண்டு-மூன்று நாட்களுக்கு உண்டுவந்தால் இருமல் நின்றுபோகும்.
நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்கவைத்து மூன்று நாள் தொடர்ந்து அருந்தி வந்தால் எப்பேர்ப்பட்ட இருமலும் வராமலே போகும்.
அடுத்த கட்டுரையில்
