வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சர்க்கரையின் அளவை சரிசெய்ய உதவும் பன்னீர் பூ !!

பன்னீர் பூ பார்ப்பதற்கு சுண்டைக்காய் போல் இருக்கும், இந்த பன்னீர் பூவானது சொலனேசி என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. ஆயுர்வேத பயன்பாட்டில் இதன்  பங்கு அதிகம் உள்ளது.

நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக கிடைத்துள்ள இந்த பன்னீர் பூ  எளிதாக மூலிகை கடைகளில் கிடைக்க கூடியது. நாட்டு மருந்து கடைகளில் பன்னீர் பூ கால் கிலோ வாங்கி கொள்ளுங்கள். இரவில் தூங்கும் முன் ஐந்து பூ எடுத்து தண்ணீரில் ஊற வைக்கவேண்டும்.
 
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அந்த பூ உள்ள தண்ணீரை வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும். பின் வடிகட்டிய அந்த தண்ணீரை அருந்த வேண்டும். இதே போன்று பத்து நாட்கள் தினமும் காலையில் அருந்த வேண்டும். நீங்கள் பத்து நாட்கள் செய்து வந்தால் கண்டிப்பாக உங்களுக்கு சர்க்கரையின் அளவு சரியான அளவு வந்து குணம் அடைவீர்கள்.
 
பன்னீர் பூ கணையத்தில் உள்ள பீட்டா செல்களை குணப்படுத்தி, இன்சுலின் பயன் பாட்டை சரி செய்கிறது. இது பீட்டா செல்களை சரி செய்வது மட்டுமல்லாமல், இன்சுலின் சுரப்பதற்கும் உதவுகிறது. மேலும் டைப் -2 நீரிழிவானது இன்சுலின் சுரப்பதை தடுக்கிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த பன்னீர் பூவானது இயற்கை மருந்தாக செய்லபடுகிறது.
 
தினமும் இரவில் ஊற வைத்து காலையில் ஊறிய காயை வடிகட்டியில் வடித்து அந்நீரை வெறும் வயிற்றில் குடித்து வர இரத்தத்தில் சர்க்கரையின் அளவு படிப்படியாக குறைந்து விடும். நீங்கள் இதை சாப்பிட ஆரம்பித்ததும் மாதம் ஒரு முறை இரத்த பரிசோதனை செய்துக்கொள்ளலாம்.