1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சொரியாசிஸ் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும் மருத்துவ குறிப்புகள் !!

சொரியாசிஸ் என்பது நம் தோல் மேல் சிவப்பு தடுப்புகள், அரிப்பு, வறட்சி போன்றவற்றை ஏற்படுத்தி ஒரு வித சீரற்ற தோல் பரப்பை உண்டு செய்யும்.

அனைத்து சருமப் பிரச்சனைகளுக்கும் இரத்தத்தில் உள்ள கிருமிகள் தான் காரணம். எனவே, இரத்தத்தை சுத்தம் செய்வது என்பதே சொரியாசிஸ் முதல் அனைத்து தோல் பிரச்சனைகளையும் சரி செய்ய 
 
கல்லீரலில் உற்பத்தியாகும் குளுதாதயோன் என்னும் புரதத்தை எலுமிச்சை தடுக்கிறது. இது இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை நீக்குகிறது. இது என்சைம்களை ஊக்குவித்து டாக்ஸின்களை கரையச் செய்கிறது. பின்னர், உடலில் இருந்து அவற்றை சிறுநீர் மூலமாக வெளியேற்றி உடலை சுத்தம் செய்கிறது.
 
நெல்லிக்காயில் இயற்கையாகவே இரத்தத்தை சுத்தம் செய்யும் பண்பு உள்ளது. இதனால் சொரியாசிஸ் வருவதை தடுக்கிறது. நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
 
நமது உடல் ஆரோக்கியத்தில் மஞ்சள் தூள் முக்கியப் பங்கு வகிக்கிறது. மஞ்சள் தூளில் சக்தி வாய்ந்த ஆன்டிஆன்ஸிடன்ட் ஆன குர்குமின் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை நீக்குகிறது.
 
சொரியாசிஸ் மற்றும் பிற தோல் வியாதிகளுக்கும் கேரட் மிகச் சிறந்த இயற்கை மருந்தாகும். ஏனென்றால், கேரடில் குளுதாதயோன், பல்வேறு வைட்டமின்களான  ஏ, பி, சி மற்றும் கே உடன் பொட்டாசியமும் உள்ளது. இவை அனைத்தும் இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை பிரித்து வெளியேற்றி விடு
 
ப்ராக்கோலியில் உள்ள நச்சுக்களை நீக்கும் பண்பு இரத்தத்தை சுத்தம் செய்யவும் மற்றும் சொரியாசிஸ் வராமலும் தடுக்கிறது. எனவே, இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை அகற்ற உதவுகிறது. அதனால், எந்த ஒரு தோல் வியாதி மற்றும் சொரியாசிஸ் ஏற்படுவதை தடுக்கிறது.
 
பாவக்காயில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. பொதுவாக இது ஒரு சிறந்த நச்சு நீக்கியாக செயல் படுகிறது. இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை இது நீக்குவதால் சொரியாசிஸ் போன்ற பல்வேறு தோல் நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன.