தொடர்புடைய செய்திகள்
- அனைத்து பாகங்களும் அற்புத மருத்துவ பயன்கள் நிறைந்த நெல்லி !!
- மருத்துவ குணங்கள் நிறைந்த வெங்காயப்பூ எதற்கு பயன்படுகிறது தெரியுமா...?
- மக்களுக்கு ரூ.5000 நிவாரணம் - முதல்வர் ரங்கசாமி வழங்கினார்!
- கண்களின் பார்வை திறனை மேம்படுத்த உதவும் கறிவேப்பிலை !!
- அடிக்கடி உடைத்த கடலை சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் பயன்கள் !!
பயன் தரும் அற்புத மருத்துவ குறிப்புகள் சிலவற்றை பார்ப்போம்...!!
எலுமிச்சை சாறை எடுத்துக்கொள்ளவும், பஞ்சை அதில் நனைத்து பருக்கள் தழும்புகள் மீது தடவவும். சிறிது நேரம் கழித்து மிதமான கொதிநீரில் முகத்தை அலம்பவும். எலுமிச்சை கரும்புள்ளிகளை போக்கவும் சிறந்த மருந்தாகும்.
சந்தனம் மற்றும் பன்னீரைக் கலந்து பேஸ்ட் போன்று செய்து முகத்தில் மாஸ்க்காக தடவிக்கொள்ளலாம். ஒரு மணிநேரம் கழித்து பிறகு அலம்பவும்.
ஆலிவ் எண்ணெய்யை ரெகுலராக முகத்தில் தடவி வந்தால் ஏற்கனவே உள்ள பருத் தழும்புகள் மறைவதோடு பருக்கள் உருவக்கத்தையே தடுத்தாலும் தடுத்து விடும்.
வெள்ளரிப்பிஞ்சு முகத்தை மென்மையாக வைக்க உதவும் மற்றொரு இயற்கைப் பொருளாகும். இதனையும் ரெகுலராக பயன்படுத்தலாம்.
அருகம்புல்லை சுத்தமாகக் கழுவி நன்றாக மென்று பல் வலி உள்ள இடத்தில் அடக்கி வைத்துக் கொண்டால் பல் வலி குறையும்.
சாதாரண வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் நீர் மோரில் உப்பு, கறிவேப்பிலை கலந்து, திரியும் வரை சுடவைத்து இரண்டு மூன்று முறை அருந்தினால் குணமாகும்.
அடுத்த கட்டுரையில்
