வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

திருநீற்றுப் பச்சிலை சாறு எதற்கெல்லாம் பயன் தருகிறது தெரியுமா...!

முகப்பருவை விரட்ட திருநீற்றுப் பச்சிலை சாறுடன் வசம்பு சேர்த்து அரைத்துப் பூசினால் பலன் கிடைக்கும். காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கு இலைச்சாறு சில சொட்டுகள் விட்டால் நிவாரணம் கிடைக்கும்.
10 மிலி திருநீற்றுப் பச்சிலை சாறு எடுத்து தேனில் சாப்பிட்டு வர மார்பு வலி, மேல் சுவாசம், இருமல், வயிற்று வாயு தீரும். குடலுக்கு  பலத்தை கொடுக்கும்.
 
இலையை மல்லுவதால் வாய்ப்புண் குணமாகும். இலையை இதமாக நெருப்பில் வாட்டி பிழிந்து சாறு எடுத்து இரண்டு துளி காதில் விட காது  மந்தம் தீரும்.
 
கர்ப்பிணிப் பெண்கள் பச்சிலைச்சாறு சாப்பிட்டால் பிரசவத்தின்போது ஏற்படக்கூடிய கடுமையான வலிகள் குறையும். அதேபோல் இதன் விதையை பிரசவத்துக்குப் பிறகு சாப்பிட்டு வந்தால் பிரசவத்தால் ஏற்பட்ட வலி குறையும். 
பச்சிலை விதையை கசாயம் செய்து குடித்து வந்தால் சுறுசுறுப்பு கிடைப்பதோடு மூத்திரக்கோளாறுகள் சரியாகும். திருநீற்றுப்பச்சிலை  விதையை சப்ஜா விதை என்பார்கள். இதில் செய்த சர்பத்தை குடித்து வந்தால் சீதபேதி, வெள்ளை, வெட்டைச்சூடு, இருமல் சரியாகும். 
 
5 கிராம் சப்ஜா விதையை 100 மில்லி தண்ணியில் 3 மணி நேரம் ஊற வைத்து குடித்துவந்தால் வயிற்றுக் கடுப்பு, ரத்தக்கழிச்சல், நீர் எரிச்சல், வெட்டை போன்றவை சரியாகும்.
 
திருநீற்றுப் பச்சிலையை முகர்வதால் தலைவலி, இதய நடுக்கம், தூக்கமின்மை ஆகியவை குணமாகும்.
 
5 கிராம் அளவு திருநீற்றுப் பச்சிலை விதையை 100 மிலி நீரில் போட்டு 3 மணி நேரம் ஊறவைத்து சாப்பிட்டு வயிற்று கடுப்பு, இரத்த கழிச்சல்,  நீர் எரிச்சல், வெட்டை ஆகியவை குணமாகும்.