வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

மினரல் வாட்டர் குடிப்பதால் ஆபத்துகள் ஏற்படுமா...?

தண்ணீரில் இருக்கும் தாதுப் பொருட்களை R.O செய்யாமல் குடித்தால் நாம் மருந்து மாத்திரை என்ற தூசுக்களை சாப்பிடுவதை தவிர்க்கலாம். எனவே தண்ணீரை ஆர்.ஓ செய்யக் கூடாது. அவ்வாறு செய்து குடித்தால் மனிதனுக்கு நோய் வரும். வாழ்நாள் முழுவதுமே தீராது.
இந்த மெஷினின் வேலை தண்ணீரில் உள்ள அனைத்து தாதுப் பொருட்களையும் எடுத்து விட்டு சத்து இல்லாத தண்ணீராக மாற்றுகிறது. பாட்டிலில் அடைத்துப் பணம் கொடுத்து வாங்கி குடிக்கிறோம். எனவே பாட்டிலில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டர் என்று அழைக்கப்படும்  தண்ணீரில் உள்ள இயற்கையான சத்துகளே இல்லாத நில்லையில் யாரும் அதனை பயன்படுத்தக் கூடாது.
 
மண் பானையில் குடி தண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் இயற்கையாகவே சக்தியை அளிக்கிறது. 
வெள்ளை நிற பருத்தித் துணியால் தண்ணீரை வடி கட்டலாம். வெள்ளை நிறத்தில் உள்ள சுத்தமான பருத்தித் துணியால் தண்ணீரை வடிகட்டினால், அந்த தண்ணீரில் உள்ள அனைத்து நோயை உண்டு செய்யும் வைரஸ், பாக்டீரியா போன்றவற்றை இந்தத் துணி உறிஞ்சிக்  கொள்கிறது என்ற உண்மை, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த தண்ணீர் வடிப்பான் மண்  பானை ஆகும். 
 
செம்பு பாத்திரம் மூலமாகவும் தண்ணீரை சுத்தப் படுத்தலாம் செம்பு என்ற உலோக பாத்திரத்தின் மூலமாக செய்யப்பட்ட ஒரு குடத்திலோ அல்லது செம்பிலோ நாம் நீரை இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வைப்பது மூலமாக தண்ணீருக்கு அதிகப் படியான சக்தி கிடைக்கிறது.  அதில் உள்ள கெட்டப் பொருள் அழிக்கப் படுகிறது. தாமிரத்திற்கு அந்த சக்தி இயற்கையிலேயே உள்ளது. எனவே செம்பு என்ற தாமிர  உலோகத்தின் மூலம் செய்யப்பட்ட பாத்திரங்களை தண்ணீர் வைக்க பயன் படுத்தலாம். 
 
செம்பில் வைக்கப்படும் தண்ணீருக்கு அவ்வளவு சக்தி உள்ளது. எனவே செம்பு என்ற உலோகத்தின் சக்தியின் மூலமாக நாம் தண்ணீரை சுத்தப்  படுத்த முடியும்.