வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

திராட்சை விதையில் புற்றுநோய் செல்களை அழிக்கும் பண்புகள் உள்ளதா...?

திராட்சையில் உள்ள விதையை பலரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் மற்ற பழங்களை விடவும், திராட்சை விதைகளில் சக்தி வாய்ந்த புற்றுநோய் செல்களை அழிக்கும் பண்புகள் மற்றும் உட்பொருட்கள் உள்ளது.
சமீபத்திய புதிய ஆய்வில், கீமோ தெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகளை விட, திராட்சை விதை முற்றிய நிலையில் இருக்கும் புற்றுநோய்  செல்களையும் அழிக்கும் சக்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது.
 
பொதுவாக புற்றுநோய்க்கு கீமோ தெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது, ஆரோக்கியமான செல்களும் பாதிக்கப்படும். ஆனால் திராட்சை விதையைக் கொண்டு புற்றுநோய்க்கு சிகிச்சை மேற்கொண்டால், அது புற்றுநோய் செல்களை மட்டும் நேரடியாக தாக்கி  அழிப்பதாகவும், ஆரோக்கியமான செல்களுக்கு எவ்வித பாதிப்பு இல்லை என்பதும் ஆய்வில் தெரிய வந்தது.
திராட்சை விதையில் மருந்து தயாரிப்பு:
 
தேவையான பொருட்கள்: திராட்சை விதை - 1 கப், கண்ணாடி ஜார் - 1, சுத்தமான காட்டன் துணி - 1.
 
தயாரிக்கும் முறை: முதலில் திராட்சை பழத்தில் இருந்து விதையைப் பிரித்தெடுத்து கொள்ளுங்கள். பின்னர் நன்கு கழுவி, துணி கொண்டு  கட்டி நீரை முற்றிலும் உறிஞ்சி 2-3 நாட்கள் நன்கு உலர்த்த வேண்டும். 3 நாட்கள் கழித்து அந்த விதையை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி  செய்து எடுத்து கொள்ளுங்கள்.
 
பயன்படுத்தும் முறை: ஒரு நாளைக்கு 2-3 முறை இந்த பவுடரை பயன்படுத்த வேண்டும். ஆகவே குடிக்கும் நீர் அல்லது ஜூஸில் 1 டீஸ்பூன்  திராட்சை விதைப் பொடியை கலந்தும் குடிக்கலாம்.