1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இஞ்சி ஜூஸை அடிக்கடி பருகி வருவதால் உண்டாகும் பயன்கள்...!!

உணவில் சுவையை அதிகப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவும் இஞ்சி இருக்கிறது. தலைவலி, காய்ச்சல், சளி, இருமல் போன்ற  நோய்களுக்கு இஞ்சி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது நம் அனைவருக்கும் தெரியும். இஞ்சியில் பல மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.

குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படாமல் தடுக்கிறது. மேலும், காலையில் ஏற்படும் சில உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தாமல் தடுப்பதற்கு இஞ்சி தடுக்கிறது. இயற்கை வலி நிவாரணிகயாக இஞ்சி செயல்படுகிறது. மூட்டுக்களில் ஏற்படும் வலிகளை இஞ்சி குறைக்கிறது. 
 
ரத்தம் உறைதலே பக்கவாதம், வலிப்பு நோய் வருவதற்கான முக்கிய காரணியாக இருக்கிறது. ரத்தத்தை உறையச்செய்யாமல் இருக்க வைட்டமின் கே சத்து உதவுகிறது. இஞ்சி சாப்பிடுவதன் மூலம், நம் உடலுக்கு வைட்டமின் கே சத்து கிறைக்கிறது.
 
இஞ்சி சாப்பிடுவது, நம் உடலில் இன்சுலின் சத்தை அதிக அளவில் சுரக்க செய்து, சர்க்கரை நோய் வராமல் செய்கிறது. நோய் ஏற்படுத்தும் கிருமிகளான பாக்டீரியா போன்ற சில கிருமிகளை நம் உடம்பிற்குள் வரவிடாமல் இஞ்சி சாப்பிடுவது தடுகிறது.
 
இஞ்சியில் உள்ள நிவாரணிப் பொருட்கள், நாள்பட்ட மூட்டு வலிகளில் இருந்து விடுபட உதவும். மேலும் இது ஆய்வுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே மூட்டு வலி பிரச்சனைகள் இருப்பவர்கள், இஞ்சி ஜூஸை அடிக்கடி பருகி வருவது நல்லது.
 
புற்றுநோய் இஞ்சி வயிற்றுப் பிரச்சனைகளான செரிமானமின்மை, பசியின்மை, வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் தருவதால்,  இஞ்சியைக் கொண்டு ஜூஸ் தயாரித்து அடிக்கடி பருகி வந்தால், இரைப்பைக் குடல் புற்றுநோய் வரும் அபாயம் குறைவதோடு, வராமலும் தடுக்கப்படும்.
 
இஞ்சி இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுவதோடு, உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவையும் குறைத்து, சீராக பராமரிக்க உதவும்.  இதனால் இதய ஆரோக்கியமும் மேம்படும்.