1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2022 (16:06 IST)

பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு அளிக்கும் அருகம்புல் சாறு !!

கண்பார்வையில் பிரச்சனை இருப்பவர்கள் தொடர்ந்து இந்த அருகம்புல் சாற்றை குடித்து வரும் பொழுது அவர்களுடைய கண்ணில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் நீங்கி கண் பார்வை தெளிவடையும்.


அருகம்புல் சாற்றை நீங்கள் தொடர்ந்து எடுத்துக்கொண்டு வரும் பொழுது உங்களுடைய உடலில் இருக்கக்கூடிய பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம்.

அருகம்புல் சாறை நீங்கள் தொடர்ந்து குடித்து வரும்பொழுது ரத்தத்தை சுத்தப்படுத்தி உங்கள் உடலில் தோல் நோய்கள் வராமல் தடுக்கிறது. கூடவே இது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன் ரத்த சோகை, இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளையும் குறைக்கிறது.

அருகம்புல்லின் ஆரோக்கிய நன்மைகள் பலருக்கும் தெரிந்த ஒன்று. ஆதிகாலத்திலிருந்தே அறுகம்புல்லை மருத்துவ பொருளாக பயன்படுத்தி உள்ளார்கள்.

சித்த வைத்தியத்தில் மிக முக்கியமான மருந்துப் பொருளாக இருப்பது அருகம்புல். அருகம்புல்லில் இருந்து எடுக்கப்படும் சாறு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நம்முடைய உடலுக்கு கொடுக்கிறது.