1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 27 பிப்ரவரி 2021 (08:26 IST)

மோடி - அமித்ஷா வசதிக்கு ஆடும் தேர்தல் கமிஷன்? மம்தா காட்டம்!

மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி.

 
5 மாநில தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் தமிழகம், கேரளா மற்றும் புதுவை ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தவும், அசாமில் மூன்று கட்டமாக நடத்தவும், மேற்குவங்கத்தில் 8 கட்டமாக நடத்தவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்து அது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி.  இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, மேற்கு வங்காளத்தில் மோடியும் அமித் ஷாவும் விரிவாக பரப்புரை மேற்கொள்ள வசதியாகவே இவ்வாறு 8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பாஜக எவ்வளவு யுக்திகள் மேற்கொண்டாலும் தேர்தலில் நாங்கள்தான் ஜெயிக்கப்போகிறோம். நான் வங்கத்தின் மகள், எனது மண்ணின் மக்களை பற்றி பாஜகவை விட நா அதிகம் அறிந்து வைத்திருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.