வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 15 ஏப்ரல் 2021 (16:19 IST)

பி,எம் கேர்ஸ் நிதி எங்கே? பிரதமருக்கு ராகுல்காந்தி கேள்வி

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு போதிய அளவு தடுப்பூசி இல்லாத நிலையில் போலியாக தடுப்பூசி திருவிழா கொண்டாடப்படுவதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனைகளில் படிக்கைகள் இல்லை. தடுப்பூசியில் சரியாகக் கிடைக்கவில்லை. இந்நிலையில் போலித்தனமான தடுப்பூசித் திருவிழா நடத்தப்படுகிறது. பிஎம்.கேர்ஸ் நிதி என்ன ஆனது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.