1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 19 ஜூலை 2023 (13:53 IST)

பாஜக, காங்கிரஸ் கூட்டணிகளிடமிருந்து விலகியே இருப்போம்- மாயாவதி

பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி, ''பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளிடமிருந்து விலகியே நிற்போம்'' என்று தெரிவித்துள்ளார்.
 
நேற்று, பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , விசிக, மார்க்சிஸ்ட் கம்யூ.,  உள்ளிட்ட 26 கட்சிகள் பங்கேற்றன.

இந்தக் கூட்டத்தில் தேசிய ஜன நாயக கூட்டணிக்கு எதிராக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்ற எதிர்க்கட்சிகள்  ஒன்றிணைந்து 2024 ஆம் ஆண்டு தேர்தல் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு  இந்தியா (Indian National Democratic Inclusive Alliance)  என்ற பெயர் வைக்கப்பட்டது.

இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணி மற்றும் ஆலோசனைக் கூட்டத்தை பாஜக கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, டெல்லியில் பாஜகவின் பலத்தை நிரூப்பிக்கும் வகையில், கூட்டம் நடத்தப்படும் என்று கூறிது போல், நேற்று, பாஜக மெகா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதிமுக, தமாக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமமுக, ஐஜேகே, உள்ளிட்ட 38 கட்சிகள் பங்கேற்றன.

இந்த நிலையில், இந்த இரண்டு கூட்டணியில்  பகுஜன் சமாஜ் கட்சி சேரவில்லை. இதுபற்றி அக்கட்சியின் தலைவர் மாயாவதி இன்று அறிவித்துள்ளதாவது: பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளிடமிருந்து விலகியே நிற்போம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சாதிய எண்ணம் கொண்ட முதலாளித்துவ சிந்தனைகளைக் கொண்ட கட்சிகளை காங்கிரஸ் கட்சி கட்டாயப்படுத்தி கூட்டணியில் இணைக்கிறது. பாஜக தலித்துகள், இஸ்லாமியர்களுக்கு எதிராக கொள்கைகளைக் கொண்டுள்ளது. எனவே இவ்விரு கூட்டணிகளிடமிருந்து விலகியே  நிற்போம் என்று தெரிவித்துள்ளார்.