1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 மார்ச் 2022 (20:42 IST)

மருத்துவம் படிக்க உக்ரைனுக்குச் செல்லாத அளவுக்கு இந்தியாவை உருவாக்குவோம்- அரவிந்த் கெஜ்ரிவால்

ஐந்து மாநில தேர்தல் நிலவரம் இன்று வெளியாகி வரும் நிலையில் பாஜக 4  மாநிலங்களில் முன்னிலையிலும் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைனுக்குச் செல்லாத அளவுக்கு இந்தியாவை உருவாக்குவோம்; பஞ்சாப் மாநில தேர்தல் முடிவுகளின் மூலம் கெஜ்ரிவால்  ஒரு தீவிரவாதி அல்ல உண்மையான தேசபக்தன் என்பதை மக்கள் காட்டியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி  மொத்தமூள்ள 117 தொகுதிகளில் 92தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது, 7 தொகுதிகளில் முன்னணில் இருப்பதாகத் தகவல் வெளியாகிறது.