1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 10 ஜூன் 2021 (18:21 IST)

ராகுல் காந்தியின் இந்தி டுவிட்டை தமிழில் மொழி பெயர்த்து டுவிட் செய்த விஜய் வசந்த் எம்பி!

தற்போது தடுப்பூசி போடுபவர்கள் ஆன்-லைன் வழியில் பதிவு செய்தால் மட்டுமே போட முடியும் என்ற நிலை உள்ளது. இதனை மாற்றி அனைவருக்கும் தடுப்பூசி போட வழி வகை செய்ய வேண்டும் என அனைத்து கட்சி அரசியல் தலைவர்கள் கூறிவருகின்றனர். இதுகுறித்து நீதிமன்றமே மத்திய மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் இதுகுறித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ஆன்-லைன் வழி பதிவு செய்தவர்களுக்கு மட்டுமில்லாமல் மையங்களுக்கு நேரடியாக செல்பவர்களுக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் என தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் இன்டர்நெட் வசதி இல்லாதவர்களுக்கு வாழ உரிமையுள்ளது என அவர் தெரிவித்துள்ளார் 
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஹிந்தியில் பதிவு செய்த இந்த டுவிட்டை தமிழில் மொழிபெயர்த்து கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் அவர்கள் பதிவு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது