1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (10:41 IST)

பானிக்கு பதில் யூரின்... பானிபூரி சாப்பிட இனிமே ரொம்ப யோசிக்கனும்...

பானிபூரி விற்கும் நபர் ஒருவர் சிறுநீரை தண்ணீரில் கலந்து விற்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள ஆத்கோகன் என்ற பகுதியில் தெருவோரமாக இருக்கும் பானிபூரி கடை ஒன்றில் இந்த அறுவறுப்பான சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த  வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியதை அடுத்து அந்த நபரை குவாத்தி போலீசார் கைது செய்துள்ளனர்.