தொடர்புடைய செய்திகள்
- சென்னை வரும் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மூ! – ஏற்பாடுகளை செய்யும் பாஜக!
- மு.க.ஸ்டாலினுடன் யஷ்வந்த் சின்ஹா சந்திப்பு: ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு திரட்டுகிறார்!
- குடியரசு தலைவர் தேர்தல்: 79 மனுக்கள் நிராகரிப்பு
- செல்லா காசான இரட்டை இலை? சுயேட்சையாகும் அதிமுகவினர்!
- குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு
ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு மேலும் 2 கட்சிகள் ஆதரவு!
இந்திய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே.
இந்த தேர்தலில் பாஜக கூட்டணியின் சார்பில் திரெளபதி முர்மு போட்டியிடுகிறார். அதேபோல் எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இரு ஜனாதிபதி வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளிடம் தீவிர வாக்குகளை சேகரித்து வருகின்றனர்
இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு அவர்களுக்கு சிரோன்மணி அகாலிதளம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது
சீக்கிய மக்களுக்கு எதிராக கொடுமைகள் இழைத்த காங்கிரஸ் கட்சிக்கு ஒருபோதும் ஆதரவு இல்லை என அக்கட்சி தெரிவித்துள்ளது
அதேபோல் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகவுடா திரெளபதி முர்மு அவர்களுக்கு ஆதரவு அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
