தொடர்புடைய செய்திகள்
- விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் இயக்கும் வெப் சீரிஸின் தலைப்பு இதுதான்!
- தலைக்கு விலை பேசும் சாமியார் மேல் நடவடிக்கை இல்லை..! – உதயநிதிக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் அறிக்கை!
- தொடர் சரிவில் தங்கம், வெள்ளி விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
- உதயநிதி பேசியது தவறு..ஆனால் தலைக்கு விலை வைப்பது காட்டுமிராண்டித்தனம்: டிடிவி தினகரன்..!
- ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை.. இன்று மீண்டும் சரிவு..!
ஒரு கிலோ ரூ.4 தான்.. ஆத்திரத்தில் தக்காளியை சாலையில் கொட்டிய விவசாயி..!
நடந்த சில நாட்களுக்கு முன்னர் தக்காளி விலை நூறு ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை ஆகி வந்தது என்பதும் இதனால் பல விவசாயிகள் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சம்பாதித்தார்கர் என்பதை பார்த்தோம்
ஆனால் தற்போது படிப்படியாக தக்காளி விலை குறைந்து வருகிறது என்பதும் தற்போது மார்க்கெட்டில் 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி விற்பனை ஆகி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கர்னூல் என்ற மாவட்டத்தில் விவசாயி தன்னுடைய நிலத்தில் விளைந்த தக்காளியை மார்க்கெட்டுக்கு எடுத்துச் சென்றபோது ஒரு கிலோ நான்கு ரூபாய்க்கு மட்டுமே வாங்குவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தான் டிராக்டரில் கொண்டு வந்த தக்காளி முழுவதையும் சாலையில் கொட்டினார். இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Edited by Siva
