1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Tiruppathi devasthanam announced about vaccination

கொரோனா தடுப்பூசி போட்டால்தான் சம்பளம்… திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி தேவஸ்தானம்
திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக்கொண்டால்தான் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி பாதிப்புகளை ஏற்படுத்திய திருப்பதி தேவஸ்தானம் கோயிலை மூடியது, இப்போது பரவல் குறைந்துள்ள நிலையில் கோயிலை திறப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இந்நிலையில் தேவஸ்தானம் கோயிலில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால்தான் ஜூலை மாத சம்பளம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.