1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 27 டிசம்பர் 2022 (17:17 IST)

மருத்துவமனையில் நடந்த நெகிழ்ச்சியான திருமணம்!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த செவிலியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது மகளுக்கு  மருத்துவமனையில் வைத்து திருமணம் நடந்துள்ளது.

பீகார் மாநிலம் கயா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பூனா குமாரி இவர். மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு சமீபத்தில் கொரொனா தொற்று ஏற்பட்ட நிலையில், அவர் தன் மகளை திருமணம் செய்துகொள்ளும் படி கூறினார்.

எனவே, அவரது கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, சாசந்தினி மற்றும் சுமித் கவுரங்  என்பவருக்கும் தனியார் மருத்துவமனையில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

அதன்பின்னர், சாந்தினி, தன் கணவருடன் திருமண கோலத்தில் ஐசிசிவில் ஸ்கிச்சை பெற்று வரும் தாயிடன் ஆசி வாங்க சென்றனர். மகளை திருமண கோலத்தின் பார்த்து, இவரையும் ஆசீர்வதித்துவிட்டு, உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Sinoj