வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 5 ஏப்ரல் 2018 (11:24 IST)

புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய போலீஸார்

புற்று நோய் பாதித்த சிறுவனின் ஒரு நாள் காவல் ஆணையர் ஆசையை போலீஸார் நிறைவேற்றி உள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் மேடக் பகுதியை சேர்ந்த இஷான் என்ற ஆறு வயது சிறுவன், ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். சிறுவன் அங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான்.
 
இந்நிலையில் சிறுவனின் மிகப்பெரிய ஆசை என்னவென்றால் காவல் அதிகாரியாக வேண்டியது தான். இதனையறிந்த ராச்சகோண்டா காவல் துறையினர் சிறுவனின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தனர்.
 
அதன்படி ராச்சகோண்டா காவல் நிலையத்திற்கு கூட்டிச் செல்லப்பட்ட சிறுவன், நேற்று காவலர் இருக்கையில் அமர வைக்கப்பட்டு, நேற்று ஒரு நாள் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டான். அப்போது அந்த சிறுவனின் முகத்தில் இருந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. காவலர்களின் இந்த செயலை பொதுமக்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.