1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (08:17 IST)

பயணிகளின் லக்கேஜூகளை விமான நிலையத்திலேயே விட்டுச்சென்ற தனியார் விமானம்..!

IndiGo
தனியார் விமானம் ஒன்று 37 பயணிகளின் லக்கேஜ்களை விமான நிலையத்திலேயே விட்டு விட்டு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் புறப்பட்டு சென்ற இண்டிகோ விமானத்தில் 37 பயணிகளின் லக்கேஜ்களை கவன குறைவாக விமான நிலையிலேயே விட்டு சென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது குறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் புறப்பட்ட விமானத்தில் பயணம் செய்த 37 பயணிகளின் லக்கேஜ் கவனக்குறைவாக விட்டுச் செல்லப்பட்டுள்ளது. 
 
விசாகப்பட்டினத்தில் பயணிகளின் முகவரிகளுக்கு அனைத்து பைகளும் பாதுகாப்பாக வழங்கப்படும் என்பதை உறுதி செய்கிறோம். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என தெரிவித்துள்ளது 
 
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் பயணிகளையே விட்டுச் சென்று விமானம் ஒன்று சென்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva