1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 11 டிசம்பர் 2021 (15:29 IST)

கேப்டன் வருண்சிங் விரைவில் குணமடைய ஒட்டுமொத்த தேசமும் பிரார்திக்கிறது -பிரதமர் மோடி

கேப்டன் வருண்சிங் விரைவில் குமடைய வேண்டுமென ஒட்டுமொத்த தேசமும் பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி  மற்றும்    ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது.
 
இதில், ஒரே விமானி கேப்டன் வருண்சிங்  மட்டும் உயிர் பிழைத்தார்.  தற்போது அவருக்கு தீவிர சிகிசை அளிக்கப்பட்டு வருகிறது.
 
 
நேற்று  பீரங்கி குண்டுகள் முழங்க முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தும் அவரது மனைவி மதுலிகா ராவத் உடல்கள் ஒரே தகன மேடையில் எரியூட்டப்பட்டன. மற்றும் அவரது மனைவியின்  நல்லடக்கம் செய்யப்பட்டன.
 
இந்நிலையில் கேப்டன் வருணசிங் விரைவில் குண்மடைய வேண்டுமென ஒட்டுமொத்த  தேசமும் பிரார்த்திக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மறைந்தாலும் அவர் நம் இதயங்களில் வாழ்கிறார் எனது தெரிவித்துள்ளார்.