1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. The Crisis in India's NavIC: Satellite Strength Falls Below Minimum Required

திடீரென செயலிழந்த இந்தியாவின் முக்கிய செயற்கைக்கோள்.. 8,700 ரயில்கள் நிலை என்ன?

Satellite
இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பமான நேவிக் செயற்கைக்கோள் கட்டமைப்பு தற்போது பெரும் சவாலை சந்தித்துள்ளது. சில நாட்களுக்கு முன்  IRNSS-1F செயற்கைக்கோளின் அணுக்கடிகாரம் செயலிழந்ததால், வழிகாட்டுதல் சேவைகளை வழங்க தேவையான செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை மூன்றாக குறைந்துள்ளது. நேவிக் சரியாக செயல்பட குறைந்தது ஏழு செயற்கைக்கோள்கள் தேவைப்படும் நிலையில், இந்த சரிவு அதன் சேவைகளைப் பாதிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
 
முன்னதாக, ஜனவரி 2025-ல் ஏவப்பட்ட NVS-02 செயற்கைக்கோள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தனது சுற்றுப்பாதையை அடைய முடியாமல் போனது. அணுக்கடிகாரங்களுக்காக வெளிநாடுகளை சார்ந்திருந்த நேவிக் திட்டத்தில், முதல்முறையாக உள்நாட்டு அணுக்கடிகாரத்துடன் என்.வி.எஸ்-01 ஏவப்பட்டது ஒரு மைல்கல்லாகும். 
 
தற்போது 8,700 ரயில்கள் மற்றும் பேரிடர் எச்சரிக்கை அமைப்புகள் இதை பயன்படுத்தி வரும் நிலையில், அடுத்தகட்ட செயற்கைக்கோள்களான என்.வி.எஸ்-03 மற்றும் என்.வி.எஸ்-04 ஏவப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 
 
L1 அலைக்கற்றை ஆதரவுடன் வரவிருக்கும் புதிய செயற்கைக்கோள்கள் மட்டுமே நேவிக் அமைப்பை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரும்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
விஜயை பார்த்து 20 வருசம் ஆச்சி!.. ஏன் கிளப்பிவிடுறீங்க?!. பவன் கல்யாண் மறுப்பு..